தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2019, 7:42 PM IST

ETV Bharat / state

ஜீரோ பாய்ண்ட் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் -மலர் தூவி வரவேற்பு!

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது.

zero point

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் ஆண்டுக்கு 12 டிஎம்சி திறந்துவிடப்படுவது வழக்கம். கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் போதிய மழை இல்லாததாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

திருவள்ளூர் ஜீரோ பாய்ண்ட்

இந்த கோரிக்கையை அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா முலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 25ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு படிப்படியாக ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் வான ஸ்வர்ணமுகி, காளாஸ்திரி, உப்பலமடுகு, சத்தியவேடு வழியாக 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. தமிழ்நாடு எல்லை வந்த கண்டலேறு அணை தண்ணீரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட பின் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details