தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருவள்ளுர்: அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

By

Published : May 27, 2019, 11:36 PM IST

திருவள்ளூர் அம்பத்தூர் ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக அம்பத்தூர் காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இளைஞரின் சடலத்தை மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் மூலம் மீட்டனர்.

அம்பத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

காவல்துறையினர் சடலத்தை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 25 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவுலர் தனஞ்செயன் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளைஞர் குளிக்கும்போது நீரில் முழ்கி இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா எனும் கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details