தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் பயங்கரம்: ரவுடி வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பெயிண்டரை வெட்டிக் கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ரவுடி வெட்டி கொலை
ரவுடி வெட்டி கொலை

By

Published : Jun 23, 2021, 10:46 AM IST

திருநெல்வேலி:கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (32). இவர், பெயிண்டிங் வேலை பார்த்துவந்த நிலையில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார். சில கொலை சம்பவங்களிலும் மாரியப்பனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மாரியப்பன் மீது சுத்தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்கு உள்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் நேற்று (ஜூன் 22) நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மாரியப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாரியப்பனுக்கு பல கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதால் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் - பிறந்த நாளன்று லாரி ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை

ABOUT THE AUTHOR

...view details