நெல்லை கட்டபொம்மன் நகர் விரிவாக்கப்பகுதியான பிருந்தாவன் நகரில் நீதிமன்ற பெண் ஊழியர் மாணிக்க சுந்தரி சனிக்கிழமை (18.052019) மாலை நாங்குநோியில் தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை வந்து பாா்க்கும்போது வீட்டிலிருந்த 15 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல், பிருந்தாவன் நகரில் பள்ளி ஊழியர் அந்தோணி வீட்டில் அவரது மகன் உறங்கிக்கொண்டிருந்த போதே, ரூபாய் இருபதாயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், ஒரு வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.
திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு இது குறித்து வந்த புகாாின் போில் பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அடுத்தடுத்து, மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.