தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கடமலை - மயிலை ஆகிய இரு ஒன்றியங்களில் 285 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 96 ஆயிரத்து 950 வாக்காளர்களும், கடமலை - மயிலை ஒன்றியத்தில் 64,193 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
2000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.