தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2022, 12:15 PM IST

ETV Bharat / state

டிஎஸ்பி அலுவலகத்தை பூட்டிய போதை ஆசாமி கைது...

தேனியில் மது போதையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின், கேட்டை இழுத்து பூட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனியில் டிஎஸ்பி அலுவலகத்தை பூட்டிய போதை ஆசாமி
தேனியில் டிஎஸ்பி அலுவலகத்தை பூட்டிய போதை ஆசாமி

தேனி: பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் நிலம் வாங்கியதில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை முடித்து தரக்கோரி உதயகுமார் (27 வயது )என்ற இளைஞர், மது போதையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக கேட்டை அடைத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதை தடுக்க வந்த காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடுப்பேன் என மிரட்டியும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் மது போதையில் இருந்து அவரை, அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டணர். பின்னர் அவர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடித்துக் கொடுக்க கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தேனியில் டிஎஸ்பி அலுவலகத்தை பூட்டிய போதை ஆசாமி

இறுதியாக மாலையில் அவருக்கு போதை தெளிந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக கேட்டை அடைத்து ரகளையில் ஈடுபட்டதற்காகவும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதற்காகவும், போலீசார் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நடு ரோட்டில் பாலியல் தொல்லை,கொடூர தாக்குதல்..! சென்னை பேராசிரியர் கைது..

ABOUT THE AUTHOR

...view details