தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவராமன் - தொட்டிச்சிக்கனி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று மகன்களும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. சிவராமன் அவரது வீட்டிலேயே பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து, பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சிவராமன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது மனைவி தொட்டிச்சிக்கனி வீட்டினுள் வேலை செய்துள்ளார். இவர்களின் கடைசி மகனான இரண்டரை வயது குழந்தை கிருஷ்ணன், அங்கன்வாடியில் பள்ளி முடித்து வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தார்.
வீட்டு வேலையை முடித்துவிட்டு தொட்டிச்சிகனி வெளியே குழந்தையை பார்க்கையில், குழந்தையை காணவில்லை. இதையடுத்து வீட்டைச்சுற்றி தேடிப்பார்க்கையில், வீட்டு பயன்பாடு மற்றும் மாடுகளின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த 5 அடி ஆழம்கொண்ட குடிநீர் தொட்டியில் குழந்தை கிருஷ்ணன் கிடந்துள்ளான்.