தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தினத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்

நீலகிரி: அவசரம் உணர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் பார்க்கப்பட்ட பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் நலமுடன் பிறந்த நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 8, 2021, 8:15 PM IST

இரட்டை பெண் குழந்தைகள்
இரட்டை பெண் குழந்தைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பகுதியிலிருந்து இன்று காலை 108 ஆம்புலன்ஸ்க்கு அவசர அழைப்பு வந்துள்ளது. விரைந்து அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியால் துடித்த அன்னபூரணி என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு, அவசரம் உணர்ந்து பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ஸ்ட்ரெட்சர் மூலம் கொண்டு செல்லும்போது மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் பிரசவம் பார்த்ததில் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரண்டு குழந்தைகளையும் தாயையும் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதித்தனர்.

மகளிர் தினத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்

தொடர்ந்து மூன்று பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான இ.எம்.டி. யுகபாலன், பைலட் சுரேஷ், ரதீஷ் ஆகியோருக்கு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட பொறுப்பாளர் விக்னேஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details