தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூலி தொழிலாளியை தாக்கிய தேனீக்கள்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

நீலகிரி: குன்னூர் அருகே வேலைக்கு சென்ற கூலி தொழிலாளியை தேனீக்கள் கொட்டியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

By

Published : Nov 20, 2020, 12:42 PM IST

தேனீக்களால் தாக்கப்பட்ட நபர்
தேனீக்களால் தாக்கப்பட்ட நபர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வநாதன் (64). இவர், இன்று (நவ.20) வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தேனீக்கள் கூண்டு கலைந்ததில், அனைத்து தேனீக்களும் செல்வநாதனை கொட்டியது.

இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்ந்து, அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவசர ஊர்தி மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, உடல் முழுவதும் தேனீக்கள் கொட்டி படுகாயமடைந்த செல்வநாதனுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்னலில் நின்றுகொண்டிருந்த டூ விலர் மீது லாரி மோதல்: இளைஞர் பலி

ABOUT THE AUTHOR

...view details