தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் பேரூராட்சி!

நீலகிரி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோத்தகிரி பேரூராட்சி செயல்படுத்தி வருகிறது.

By

Published : Jul 19, 2019, 10:37 AM IST

மரக்கன்றுகள் நடும் பேரூராட்சி

நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்ய பேரூரைட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் பேரூராட்சி
இப்பசுமை திட்டத்தை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details