தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2020, 2:39 PM IST

ETV Bharat / state

நீலகிரியில் ஒரு வயது குழந்தைக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு வயது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

One year old boy affected with covid-19 in nilgiris
நீலகிரியில் ஒரு வயது குழந்தைக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 89 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் முதல் முறையாக குன்னூர் ஜெகதளா பேரூராட்சி உதயம் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 7 நபர்களுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் எல்லநள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அலுவலரிடம் இரண்டாம் நிலை தொடர்புடையவர்கள் ஐந்து பேரும், மேட்டுப்பாளையம் சென்று தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தொடர்புடையவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு நகரப்பகுதியில் உள்ளோர் செல்ல தடை!

ABOUT THE AUTHOR

...view details