நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதியான தேதி, ரசாயன கலவையுள்ள உணவுப் பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று சுற்றுலாத் தலங்களில் குழந்தைகள் சாப்பிடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.