நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தையொட்டி, கர்நாடகா மாநிலத்தின் பன்டிபூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இந்நிலையில் ஊட்டி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், மொகுன அள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மர்மமான முறையில் புலி உயிரிழப்பு - வனத்துறை விசாரணை
நீலகிரி: பன்டிப்பூர் சரணாலயம் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலி, வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மமான முறையில் இறந்துகிடந்த புலி!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறு சோதனை நடத்தினர். அதன்பின், புலிக்கு விஷம் வைக்கப்பட்டதா அல்லது வேட்டையாடப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.