தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2020, 9:13 AM IST

ETV Bharat / state

போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!

நீலகிரி: உதகையில் போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு வரை தொடர்சிறையில் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டள்ளார்.

நீலகிரி குண்டர் சட்டம்  நீலகிரி செய்திகள்  போதைப் பொருள் விற்றவர்  man arrested under goondas act on ooty
போதைப் பொருள் விற்றவர் மீது குண்டர் சட்டம்

உதகை நொண்டிமேடு ஒத்தமரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(37), கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை விற்று இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். இவர் மீது போதைப் பொருள்கள் விற்றதாக, பல்வேறு புகார்கள் வந்ததால் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள் விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் கைது.

இந்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு தொடர் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, சிவக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய நாட்டிற்கு கடத்த இருந்த போதை பொருள்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details