தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2021, 1:28 PM IST

ETV Bharat / state

Heavy rain fall: நீலகிரி மாவட்டத்தில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் மக்கள் இன்னலுக்கு உள்ளாகினர்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை
நீலகிரி

நீலகிரி: கடந்த ஐந்து நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு (Landslide) ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

மேலும், சில நாள்களுக்கு முன்பு அரவங்காடு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குன்னூர் பகுதியில் 80-க்கும் அதிகமான மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் வெட்டப்பட்டுவருகின்றன.

நீலகிரி

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இப்பகுதியில் மலைகளுக்கு நடுவே புதிய நீரூற்றுகள் உருவாகியுள்ளதைப் போன்று காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க:Tirumala Rains - தீவு போல் மாறிய திருப்பதி

ABOUT THE AUTHOR

...view details