தமிழ்நாடு

tamil nadu

துரியன் பழங்களை விற்பனைசெய்ய முடியாமல் வியாபாரிகள் வேதனை!

By

Published : Jun 20, 2020, 8:25 AM IST

நீலகிரி: கரோனா பாதிப்பு காரணமாக குன்னூர் பர்லியார் பகுதியில் விளைந்துள்ள துரியன் பழங்களை விற்பனைசெய்ய முடியாமல் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

துரியன் பழம்
துரியன் பழம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் பல்வேறு அரியவகை மூலிகைத் தாவரங்கள், பழங்கள் விளைகின்றன. இதில் குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு இத்துரியன் பழமானது அதிக அளவில் காய்த்துள்ளது.

துரியன் பழங்களை விற்பனைசெய்ய முடியாமல் வியாபாரிகள் வேதனை

ஆனால் தற்போது இந்தக் கரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் வராமல் உள்ளனர். இதன் காரணமாக பர்லியார் பகுதியில் விளைந்துள்ள துரியன் பழமானது மரத்திலேயே பழுத்து கீழே விழுந்து வருவதோடு, வியாபாரிகளும் பழங்களை அதிக அளவில் வியாபாரம் செய்ய முடியாமல் வேதனை அடைந்துவருகின்றனர்.

மேலும், லட்சக்கணக்கில் முதலீடு செய்யப்பட்ட வியாபாரிகள் தற்போது துரியன் பழங்களை வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பலாப்பழம் விற்பனை சரிவு, கவலையில் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details