குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து குன்னூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை தொடங்கிவைத்தார். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.