தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2020, 4:12 PM IST

ETV Bharat / state

சி.ஏ.ஏ. எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி போராட்டம்

நீலகிரி: சி.ஏ.ஏ.விற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் பேருந்து நிலையத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

nilagiri
nilagiri

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து குன்னூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை தொடங்கிவைத்தார். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திமுக நகர செயலாளர் ராமசாமி, திமுக உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பெண்கள் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி

இதையும் படிங்க: குமரியில் சிஏஏவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details