தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2019, 9:43 PM IST

ETV Bharat / state

தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை

நீலகிரி: தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்கக் கூட்டம் குன்னுார் உபாசி அரங்கில் நடந்தது.

தேயிலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்கக் கூட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வாரியத்தின் செயல் இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.

அப்போது நல்ல தரமான தேயிலை உற்பத்தி செய்வது குறித்த திட்டங்களை தென்னிந்திய தேயிலை வாரியம் செயல்படுத்தி வருவது குறித்து அவர் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

தேயிலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

இந்தக் கூட்டத்தில் 12, 10ஆம் வகுப்பு தேர்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் 26 பேருக்கு, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கிழ் நேரு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறு தேயிலை விவசாயிகளுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details