தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவை உறுப்பினர்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: ஆ.ராசா

நீலகிரி: இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள மக்களவை தொகுதிகளின் மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சந்திக்கவுள்ளதாக ஆ.ராசா தொிவித்தாா்.

By

Published : Oct 4, 2019, 8:30 PM IST

A.Raja

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும் 11 தொழிற்சாலைகளும் அடங்கும். தமிழ்நாட்டில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னையிலுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்த நிலையில் குன்னுாா், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழு சாா்பாக நீலகிாி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட நீலகிாி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ. ராசா தொழிலாளா்களிடமும், தொழிற்சங்கத்திடமும் கலந்துரையாடினாா்.

ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பு

பின்னா் ஆ.ராசா செய்திளாா்களிடம் கூறியதாவது, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார்மயமாதலை தடுப்பதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள மக்களவை தொகுதிகளில் இருக்கும் மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சந்திக்கவுள்ளதாக தொிவித்தாா்.

இதையும் படிங்க: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எம்எல்ஏவிடம் மனு!

ABOUT THE AUTHOR

...view details