தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் அருகே தனியார் ஹோட்டலில் 28 பேருக்கு கரோனா

By

Published : Jan 16, 2022, 10:51 PM IST

குன்னூரில் அமைந்திருக்கும் தனியார் ஹோட்டலில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

28 people infected with corona at a hotel near coonoor
குன்னூர்

நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில், தனியா ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 28 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று உறுதியான அனைவரும் அதே ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், ஏழு நாள்கள் ஹோட்டலை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனையடுத்து, ஹோட்டலை மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:முன்னாள் முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details