தமிழ்நாடு

tamil nadu

காதலர்களினால் கோயிலில் ஏற்படும் கலங்கம் - பொதுமக்கள் கோரிக்கை!

By

Published : Jan 8, 2020, 5:28 PM IST

தஞ்சாவூர்:  பெரிய கோயிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளால், புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Trouble in the temple by lovers
Trouble in the temple by lovers

தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், அங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் கோயிலின் புனிதத் தன்மை இழந்து விடும் என்று சில பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், இளம் காதலர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டால் கோயிலின் புனிதத் தன்மை குறைந்துவிடும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூடுதல் காவலர்களை நியமித்து ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலர்களினால் கோயிலில் ஏற்படும் கலங்கம்

இதையும் படிங்க:உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள்!

ABOUT THE AUTHOR

...view details