தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2020, 3:20 PM IST

ETV Bharat / state

கரோனாவால் பாதித்த கோடை கால விவசாயப் பணி

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை கால விவசாயப் பணி கரோனாவால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.

கரோனாவால் பாதித்த கோடை கால விவசாயப் பணி
கரோனாவால் பாதித்த கோடை கால விவசாயப் பணி

திருக்காட்டுப்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை விவசாயம் பம்புசெட் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடந்துவருகிறது.

இந்தாண்டு 144 தடை உத்தரவு காரணமாகவும், கரோனா பாதிப்பினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது என்பதாலும், அப்படி வரும் மக்கள் விவசாயம் செய்யும்பொழுது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவும், விவசாயப் பணிகளுக்கு அவர்கள் வராததினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதித்த கோடை கால விவசாயப் பணி

இந்தப் பணிகள் தொய்வு ஏற்படும்பட்சத்தில் கோடை விவசாயம் என்பது செய்யமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வயல் வைத்துள்ளவர்கள் உள்ளனர். இச்சமயத்தில் அதிகப்படியாக கூலி கொடுத்து எப்படியாவது கோடை விவசாயம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலர் தங்கள் வயல்களில் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சியதுடன், டிராக்டர் உதவிகொண்டு உழவுசெய்து அதிகப்படியான கூலிகொடுத்து நாற்றுநடும் பணியில் பொதுமக்களை ஈடுபடுத்திவருகின்றனர்.

இதனால் எப்போதும் நடக்கும் விவசாயம் சற்று குறைவாகவே தற்போது நடந்துவருவதாக வயல் வைத்துள்ளவர்கள் தெரிவித்தனர். மேலும் விவசாயப் பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அரசு குறைந்த வாடகையில் தரும்பட்சத்தில் தங்களால் முழு விவசாயம் செய்ய வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கரோனாவிலிருந்து மீண்ட இருவர்: கைத்தட்டி வழியனுப்பிய ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details