தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கடல் பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது உப்பு வாரும் தருவாயில் இருக்கிறது.