தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2019, 12:37 PM IST

ETV Bharat / state

ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். செல்வகுமார் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே சென்ற செல்வகுமார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details