தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2021, 6:10 PM IST

ETV Bharat / state

சசிகலா குறித்த அவதூறு பேச்சு: சி.வி. சண்முகம் மீது அமமுகவினர் புகார்

தஞ்சாவூர் : சசிகலாவை அவதூறாக பேசியதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக ஒன்றிய செயலாளர் ராஜ பிரபு மதுக்கூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சி.வி. சண்முகம் மீது அமமுகவினர் புகார்
சி.வி. சண்முகம் மீது அமமுகவினர் புகார்

இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் ராஜ பிரபு தலைமையிலான அமமுகவினர் மதுக்கூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சசிகலாவை அவதூறாக பேசியதுடன் மட்டுமல்லாமல் எங்களையும் மிரட்டிவிட்டு தற்போது நாங்கள் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details