தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2023, 7:32 AM IST

ETV Bharat / state

ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்து கட்டடக் கலையையும் பார்த்து வியந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு பொடி,பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

முன்னதாக நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி வீதி உலா நடைபெற்று சுவாமி கோயிலுக்கு வந்தடைந்து பின் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

இதையும் படிங்க:Pradosha Pooja: தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details