இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சம் காரணமாக இலங்கை மன்னார் மாவட்டத்திலிருந்து கைக்குழந்தைகள், பெண்குழந்தைகள், பெண்கள் உட்பட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 நபர்கள் கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து பைபர் படகில் அகதிகளாக, நள்ளிரவில் தனுஷ்கோடி மணல் திட்டில் வந்து இறங்கினர். மேலும், அங்கு அவர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளனர்.
இதையடுத்து, மேலும் இலங்கையிலிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப்பகுதியில் பைபர் படகில் 5 பேர் வந்திறங்கினர். அனைவரையும் மெரைன் காவல்துறையினர் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.