சேலம், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்சட்ட விரோதமாக நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அகமது பாஷாவின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ், லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழுந்துள்ளதாகத் தெரிவிக்கும்படி அகமது பாஷாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அகமது பாஷைவைத் தாக்கிய சதீஷ், கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெளியே வந்த சதீஷ் மீண்டும் அகமது பாஷாவுடன் நட்புடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு, ஆட்டோ ஓட்டுநர் சதீஷ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து அகமது பாஷாவை லாட்டரி பணம் தொடர்பாக பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு வந்த அகமது பாஷாவிடம் சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அகமது பாஷா அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.