தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2020, 2:56 PM IST

ETV Bharat / state

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு!

சேலம்: ஓமலூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

new born baby rescued in salem
new born baby rescued in salem

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த அம்மன் கோயில்பட்டி குடியிருப்பு பகுதியில் துரைசாமி - பவுனா என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே இன்று (டிசம்பர்.27) அதிகாலை பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

பச்சிளம் குழந்தை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுனா 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள் குழந்தையை மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு!

பின்னர், குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிறந்து சில மணி நேரத்தில் தெருவில் பச்சிளம் ஆண் குழந்தை வீசப்பட்டது குறித்து தொளசம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடம்பூர் ஜனார்த்தனம் இழப்பு அதிமுக-விற்கு பேரிழப்பு -அமைச்சர் கடம்பூர் ராஜு!

ABOUT THE AUTHOR

...view details