இந்த உணவுத் திருவிழா குறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் உணவுத் திருவிழா நிகழ்வுகளைப்போன்று, இந்த உணவுத் திருவிழாவிலும் சேலம் மாவட்டத்தின் சுவைமிகு உணவு வகைகளைக் காட்சிப்படுத்தவுள்ளோம். உணவுப் பொருள்களை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் எங்களது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மூன்று நாள்கள் உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா நாளை தொடங்கி, வரும் 29ஆம் தேதிவரை சேலம், மூன்று ரோடு அருகிலுள்ள ஜவஹர் மில் திடலில் நடைபெறவிருக்கிறது . இந்த உணவுத் திருவிழாவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உணவகங்கள் பொதுமக்கள் முன்னிலையிலேயே பல்வேறு சைவ, அசைவ உணவு வகைகளையும் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கவுள்ளது" என்று தெரிவித்தார்.