தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2022, 11:46 AM IST

ETV Bharat / state

அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி !!…சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுகவின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிச்சாமியே என சேலம் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!!…சேலத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!!…சேலத்தில் பரபரப்பு

சேலம்:கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அஇஅதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் , அது ஓ.பன்னீர் செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்பது குறித்து இருவரின் ஆதரவாளர்களும் முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதிமுக ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி!!…சேலத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

இந்த நிலையில் இன்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நூற்றுக்கணக்கில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கோவை - சீரடி தனியார் ரயில்: சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்டன ஆர்ப்பாட்டம் ...

ABOUT THE AUTHOR

...view details