தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2022, 7:41 PM IST

ETV Bharat / state

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 120 அடியில் இருந்து சரிந்து அணையின் நீர்மட்டம் 119.89 அடியாக உள்ளது

45 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து சரிந்தது
45 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து சரிந்தது

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டில் கடந்த ஜூலை 16ஆம் தேதி மற்றும் கடந்த மாதம் 12ஆம் தேதி என இரண்டு முறை 120 அடியை எட்டியது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஓகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருந்தது. இதனைதொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 11,774 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் வரத்தின் அளவைவிட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 45 நாட்களுக்குப் பிறகு அதன் முழு கொள்ளளவான 120 அடியில் இருந்து சரிந்துள்ளது . தற்போது அணையின் நீர்மட்டம் 119.89 அடியாக சரிந்துள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியின் கணவரை தாக்கிய சேர்மன் கைது!

ABOUT THE AUTHOR

...view details