தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 10:40 PM IST

ETV Bharat / state

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் சத்துணவு பணியாளர்கள்
Tamil Nadu Nutrition Workers

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க்கும் வகையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 38 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பொது மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க:கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details