தமிழ்நாடு

tamil nadu

முன்மாதிரி எம்.பியாகத் திகழும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி

By

Published : Dec 20, 2020, 1:21 PM IST

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது சொந்த செலவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 700 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

700 ஏழை மாண,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி
700 ஏழை மாண,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது சொந்த செலவில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த உயர்க்கல்வி படிக்க இயலாத ஏழை எளிய மாணவர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்களை தேர்ந்தெடுத்து இன்று (டிச. 20) தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி உதவி வழங்கினார்.

இதுதொடர்பாக பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, "மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்நிகழ்ச்சியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை நிதியாக வழங்கப்பட்டுள்ளது" என்றார். கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் நவாஸ்கனி எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details