ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேவுள்ள மல்லனூர் கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்ணாய் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இந்த கண்மாயை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. கடந்த மாதம் கவுன்சிலர், அவரது மகன் ஆகியோர் சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் கண்மாயின் அருகில் உள்ள வாய்காலில் சறுக்கை கட்டுவதற்காக வந்து பார்வையிட்டபோது தவறுதலாக கண்மாயின் மடையை உடைத்துவிட்டதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
தற்போது கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக கண்மாய் நிரம்பிவிட்டது. மேலும், தண்ணீர் வந்துகொண்டுள்ள நிலையில் கண்மாய் மடையை உடைத்த பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வீணாகி வருகிறது.