தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை - மக்கள் அச்சம்!

By

Published : Dec 30, 2022, 9:12 PM IST

புதுக்கோட்டையில் இளைஞர் கடத்தப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Youth
Youth

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொண்டைமான் நகரைச் சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் நேற்று (டிச.29) மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலையரசன் குடும்பத்துக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே புதுக்கோட்டையில் பட்டப் பகலில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும், கடந்த வாரம் பொன்னமராவதியில் தாய், மகனை கொலை செய்துவிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில் மற்றொரு கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியையும், பாதுகாப்பு பணியையும் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தொடர் பணம் பறிப்பில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details