புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையின் அருகேயுள்ள மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமதுரியாஸ் (19), எஸ்.பி. பட்டிணம் பகுதியைச் சேர்ந்த பாதுஷ அப்பாஸ் (19) ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினத்திலிருந்து மீமிசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டுப்பாட்டையிழந்த இருசக்கர வாகனம் சாலையிலிருந்த மரத்தில் மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.