தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2020, 9:59 PM IST

ETV Bharat / state

100 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது!

புதுக்கோட்டை: காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

one-hundred-kilos-of-tobacco-products-confiscated-two-arrested
one-hundred-kilos-of-tobacco-products-confiscated-two-arrested

புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் மேல ராஜவீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

காரை துரத்திச் சென்று பிடித்த காவல்துறையினர், அதில் சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ அலவிலான புகையிலைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் வந்த இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அப்துல் ஸலாம் என்பதும், இவர்கள் வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக்கடை உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details