தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 1:49 PM IST

ETV Bharat / state

காரும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

pudukottai
pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சேமங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர் மீது அவ்வழியே வந்த கார் மோதி விபத்துள்ளகுள்ளானது. அதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காரும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் உயிரிழப்பு

பின்னர் மீமிசல் காவல்துறையினர் விசாரணையில், உயிரிழந்தவர் அரசநகரிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சாதிக் என்பது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த தூத்துகுடியைச் சேர்ந்த இமானுவேல்பால் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மணல் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details