தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 5:12 PM IST

ETV Bharat / state

பயணியர் நிழற்குடையில் பட்டியலின ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெயர் புறக்கணிப்பா?

புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

anchayat-union-leader
anchayat-union-leader

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம், குன்னூர் ஊராட்சியிலுள்ள முதுவளர்குடி கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிட்டில் புதிதாகப் பயணியர் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடை கடந்த சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்தப் புதிய நிழற்குடையில், சட்டப்பேரவை உறுப்பினர் ரெத்தினசபாபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, நரேந்திரஜோதி, ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் சுப்பு, ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. திமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரான உமாதேவி பெயர் எழுதப்படவில்லை.

ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள நிலையில், தலைவர் பெயர் ஏன் எழுதப்படவில்லை, தலைவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் எழுதப்படவில்லையா அல்லது பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பெயர் புறக்கணிப்பு விவகாரத்தை, தீண்டாமையால் ஒன்றியக் குழு தலைவர் பெயர் இடம்பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள பயணியர் நிழற்குடை

இது தொடர்பாக ஒன்றியக்குழுத் தலைவர், உமாதேவியிடம் கேட்டபோது, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரெத்தினசபாபதி அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை என்பதால் என் பெயர் எழுதாமல் விட்டிருக்கலாம் என்றார்.

சுவரொட்டிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஒன்றியக் குழு தலைவராகிய நான் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் என் பெயர் விடுபட்டிருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆவுடையார் கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

திமுக தலைமை நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளேன். உரிய முறையில் விளக்கம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க :ஊராட்சித் தலைவரை சாதி ரீதியாக அவமானப்படுத்திய விவகாரம்: காவல் துறை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details