தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2021, 1:09 PM IST

ETV Bharat / state

அரசு ஊழியர்கள் 54 பேருக்கு கரோனா!

புதுக்கோட்டை : வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லவிருந்த அரசு ஊழியர்கள் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் தகுந்த இடைவெளி விழிப்புணர்வு மேலோங்கி இருக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சமூக இடைவெளி விழிப்புணர்வு மேலோங்க ஆட்சியர் வேண்டுகோள்
சமூக இடைவெளி விழிப்புணர்வு மேலோங்க ஆட்சியர் வேண்டுகோள்

புதுக்கோட்டையில் இன்று (மே 2) வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லவிருந்த இரண்டு வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், காவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் என 54 அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என அனைவரும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைவரிடமும் தகுந்த இடைவெளி விழிப்புணர்வு மேலோங்கி இருக்க வேண்டும் என ஆட்சியர் உமாமகேஸ்வரி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது - விரிவாக பார்க்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details