புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள புதூர் தாழம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் முத்துகுமார்(20). இவர் நேற்று தனது அத்தை மகனுடன் வயலில் நடவுக்காக வைத்திருந்த நெல் விதைகளின் நிலையைக் காணச்சென்றுள்ளனர்.
அப்போது பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பிரகாஷ் செய்வது அறியாமல் திகைத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவப் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
அதன் பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மின்னல் தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்னல் பாய்ந்து கொத்துக் கொத்தாக மடிந்த மக்கள்!