புதுக்கோட்டை: திருமயம் அருகே குழிபிறைபட்டியில் வசித்து வருபவர் சித்ரா. இவரது கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவின் காரணமாக இறந்துவிட்ட நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறார்.
இவரது பாழடைந்த ஓட்டு வீடானது கரையான்கள் அரித்து உள்ளதோடு, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்து உள்ளதால், மழைக்காலங்களில் வீட்டின் உள்ளே மழைநீர் ஒழுகுவதால், அருகில் உள்ள அங்கன்வாடியில் மழை காலங்களில் சித்ரா வசித்து வருகிறார்.