தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 4:19 PM IST

ETV Bharat / state

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

பெரம்பலூர்:  வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Voter Awareness Rally
Voter Awareness Rally

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பற்றிய முகாம் இந்த மாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணி காமராஜர் வளைவு, சங்கு பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் நாட்டு நலப்பணி திட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details