தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு தரப்பினரிடையே மோதல்: கத்திக்குத்தால் இளைஞர் பலி!

பெரம்பலூர்: எளம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலாகி கத்திக்குத்தில் முடிந்தது. இதில் இளைஞர் ஒருவர் பலியானதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Published : Jul 6, 2019, 3:30 PM IST

வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(18) டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர், அவரது உறவினர்கள் பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் நேற்று கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத், கார்த்தி, ராஜாராம் ஆகியோருக்கும் பிரகாஷ் தரப்பினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இரு தரப்பினரிடையே மோதல் கத்திக்குத்தால் இளைஞர் பலி!

இதனிடையே நேற்று கேரம் விளையாடிக் கொண்டிருந்த பாஸ்கர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் எதிர் தரப்பினர் கத்தியைக் கொண்டு தாக்கியதில் பாஸ்கர் தரப்பினர் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ராஜேஷ், பிரகாஷ் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details