பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு பயிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் நகர காவல் நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த எல்கேஜி, யுகேஜி பள்ளிக் குழந்தைகள்!
பெரம்பலூர்: தனியார் பள்ளிகளைச் சேர்ந்த எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
பள்ளி குழந்தைகள்
காவல் நிலையத்தில் உள்ள வாக்கி டாக்கி, துப்பாக்கி உள்ளிட்டவைகளை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், காவல் ஆய்வாளர் நித்யா குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்வித்தார். இந்நிகழ்வில் காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:விவசாய தோட்டத்தில் புகுந்த 2 யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு