தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையம்!

பெரம்புலூர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் இருப்பதாகவும், வாக்கு எண்ணும் பணியில் 360 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 600 போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அம்மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம்

By

Published : May 22, 2019, 8:29 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் எண்ணப்படுகிறது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 94 ஆயிரத்து 644 வாக்குகள் பதிவாகியுள்ளன. நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் அதன்பின் மின்னணு இயந்திரங்களின் மூலம் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப்படுகின்றன.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேலும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், உன் பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள் என மொத்தம 306 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஊர்க்காவல் படையினர் என 600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 59 வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்போடு மட்டும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details