தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் தீ விபத்து; மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் அஞ்சலி

பெரம்பலூர்: கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94  குழந்தைகளுக்கு பெரம்பலூர் மாவட்டம்  துறைமங்கலம் பகுதியில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது

By

Published : Jul 16, 2019, 4:18 PM IST

பெரம்பலூர்

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். அந்த கோர விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பகம் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்களைத் தூவியும் மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் தீ விபத்து அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details