தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார பேரணி...!

By

Published : Feb 28, 2020, 5:25 PM IST

பெரம்பலூர்: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

Awareness of Tamil rule language
Awareness of Tamil rule language

மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி பெரம்பலூரில் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கடைவீதி, சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது.

Awareness of Tamil rule language

இந்த பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், "தமிழ் வளர்ப்போம், தமிழை காப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details