தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2020, 3:22 PM IST

ETV Bharat / state

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது!

நாமக்கல்: புதுசத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செலுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது!
Young man arrested in pocso

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த இலக்கபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் ஏழு வயது மகளை அப்பகுதியில் உள்ள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு 7 வயது சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு தொடர் விசாரணை செய்தபோது அதே பகுதியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி இளைஞரான கார்த்திகேயன் என்பவர், பாட்டியுடன் வசித்து வந்த 7 வயது சிறுமியிடம் பழகி, மிட்டாய் வாங்கி கொடுத்து அருகில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த புதுசத்திரம் காவல் துறையினர், பொறியியல் பட்டதாரியான கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்ற நிலையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details